Thursday, January 21, 2010

VAT என்றால் என்ன ?

உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார். உற்பத்தி செய்த பொருளை ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார். அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார். அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit" என்றழைக்கப் படுகிறது. இந்த V.A.T. சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார். ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.


"Input Credit" என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு Electric Motor - ஐ பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார் எனக்கொள்ளுங்கள். இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை Input Credit ஆக எடுத்துக் கொள்ள முடியாது. அதே Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை Input Credit ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள். அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.

உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது, Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது. V.A.T. வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது. இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.

இதில் Resale Tax, Surcharge, Turn-over- tax போன்றவைகள் கிடையாது.

இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?

இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் Assessment கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும். வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.
மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.
அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்

கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு. இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, January 19, 2010

முட்டாள் மாற மாட்டான்

ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.




”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து

வாங்கிக்றீயா”



” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்



மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று

கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்



“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”



கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து

கடையில்லை”



“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக்கடையா மாத்திட்டீங்களா”



“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”



“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”



“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”



வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார்.

தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும்



“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக்

கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே

ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி

சொல்லிடுங்க”

Monday, December 28, 2009

"பிணத்தை பேசவைக்க முடியுமா? விஞ்ஞானிகள் நடத்தும் பகீர் ஆராய்ச்சி"

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு



மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்

இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்! மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்...ப வெரி சிம்பிள்! "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் "அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது
தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள். சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர். இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல்.
முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்... என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.



இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், "எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.

"கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்... பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

"அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

87வயசு வரை வாழலாம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகமக்கள் தொகை ஆய்வு அமைப்பு 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளது.

இது பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2050-ல் உலக மக்கள் தொகை 920 கோடியாக இருக்கும். அமெரிக்கர்களின் இப்போதைய சராசரி வாழ்நாள் 77.5 ஆண்டுகள் ஆகும். இந்தியர்களின் வாழ்க்கை காலம் 64.7 ஆண்டுகள் முதல் 75.5 ஆண்டுகள் வரை.

2050 ஆண்டு வாக்கில் இந்தியர்களின் வாழ்நாள் இன்னும் 11 ஆண்டுகள் அதிகரிக்கும்.

இந்தியாவில் இப்போது 80 வயதை தாண்டியவர்கள் 78 லட்சமாகவும், 65 வயதை தாண்டியவர்கள் 7 கோடி பேரும், 60 வயதை தாண்டியவர்கள் 33 கோடியாகவும் உள்ளனர். இவர்கள் முறையே வருகிற 2050 ஆண்டில் 5 கோடியே 20 லட்சம் பேர், 24 கோடி பேர், 85 கோடி பேராக இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி சுற்றுலா


இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை எந்திரத்தனமாகிவிட்டது. பணம் சம்பாதிக்க, அலுவலகப்பணி, வீட்டு வேலை, மருத்துவ தேவை, குடும்பத்தேவை, விருந்து, விழாக்கள், கல்வி... என்று மனிதன் எந்திரத்தனமாய் பணத்தை தேடி கனவுகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். அவசியத் தேவை நிறைவேறியதும் ஆடம்பர கனவுகள் துரத்த... மனிதனின் 'பண ஓட்டம்" மட்டும் முடிவில்லாமல் தொடருகிறது.எந்திர வாழ்க்கையில் இருந்து மீள மனிதனுக்கு உதவ பல்வேறு பொழுது போக்கு வசதிகளும் சாதனங்களும் உள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டது சுற்றுலா. உடலுக்கும், மனதுக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது சுற்றுலா. புதிய இடம், புதிய சூழல், புதிய முகங்கள்... என்று எல்லாமே புதிதாய் இருக்க... அந்த சூழலில் சுற்றுலா செல்லும் சில நாள் அனுபவம் மறக்க முடியாதது. புதிய சிந்தனைகள், தொலைநோக்கு பார்வை, சவால்களை சந்திக்கும் மனத்துணிவை தரக்கூடியது சுற்றுலா.சுற்றுலாவின்போது நாம் காணும் பூத்துக்குலுங்கும் சோலைகள், மலைப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், புண்ணிய தலங்கள், வரலாற்று சாதனைகள் போன்றவை உடலையும் மனதையும் இளமைத்துள்ளலோடு ஊஞ்சலாட்டும்.நிலம், நீர், ஆகாயம் என்பதோடு சுற்றுலாவின் எல்லைகள் முடிந்து விடவில்லை. அதையும் தாண்டி விண்வெளி வரை சுற்றுலா சிறகு விரிந்துள்ளது.


''நிலவில் மனிதனை குடியமர்த்துவோம், செவ்வாய்க்கு மனிதன் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று விஞ்ஞானிகள் கற்பனைகளை நிஜமாக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 'விண்வெளி சுற்றுலா" என்பது கற்பனை அல்ல. அது நிஜம் என்பதை டென்னிஸ் டிட்டோ, மார்க் ஷட்டில் ஒர்த் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆம். இவர்கள் இருவரும் 'சுற்றுலா பயணி"களாக பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்று அங்கு விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்துவிட்டு பத்திரமாக திரும்பியுள்ளனர்.

விண்வெளி சுற்றுலா பற்றிய தகவல்கள் ''அறிவியல் அதிசயம்"" பகுதியில் இடம்பெறுகிறது.

விண்வெளி சுற்றுலா

பயணிகள் கவனிக்க... பூமியில் இருந்து நிலவுக்கு செல்லும் ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.மைக்கில் இனிமையான பெண் குரல் தேனாய் பேசியது.
பயணிகள் தங்கள் சூட்கேஸ்களை இழுத்துக்கொண்டு ராக்கெட் ஏற விரைந்தனர்....""
'விண்வெளி சுற்றுலா" பற்றிய கற்பனை கதையின் ஆரம்பம் இப்படி இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இது நிஜமாகும் என்று அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். சாதாரண பொது மக்களும் 'டிக்கெட்" எடுத்து விண் வெளியில் 'ரவுண்டு" அடித்துவிட்டு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை"" என்பது விஞ்ஞானிகளின் வாதம்.'விண்வெளி சுற்றுலா" என்ற மகத்தான திட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. 1950_ம் ஆண்டுகளில் விண்வெளிக்கு செல்ல பயன்படும் ஏவுகணையின் வடிவமைப்பு மற்றும் நிலவைப்பற்றி ஆய்வுகளும் 'நம்பிக்கை அலை"யை பரப்பியது. விண்வெளி ஆய்வில் மனிதன் ஏதோ சாதிக்கப் போகிறான் என்று உலக மக்கள் நம்பிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்தனர்.விண்வெளிக்கு ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் அனுப்பும் தொழில்நுட்ப வளர்ச்சி தான் 'விண்வெளி சுற்றுலா"வின் முதல் கட்டமாகும்.விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் ஆய்வு முதலில் 'ஒரு வழிப்பாதை"யாகவே இருந்தது. அதாவது விண்வெளிக்கு செல்லும் வகையில் மட்டுமே முதலில் 'ராக்கெட்டு"கள் தயாரிக்கப்பட்டன.


1960_ம் ஆண்டுகளில் 'அப்பல்லோ" கலம் வடிவமைக்கும் பணியின்போது 'மறு உபயோக ஏவுகலம் வடிவமைக்கும் தொழில்நுட்பம் உருவானது. எஸ்.ஏ.எஸ்.எஸ்.டி.ஓ. மற்றும் வி.டி.ஓ.எல் தொழில் நுட்ப முறைகளை இணைத்து மறுஉபயோக ஏவுகலம் வடிவமைக்கப்பட்டது.


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வுகளில் முனைப்புடன் ஈடுபட்டனர். பசுபிக் - அமெரிக்க ஏவுகள நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஹட்சன் என்பவர் விண்வெளிக்கு பயணம் சென்று திரும்பும் வாகனமான ''போனிக்ஸ்"" பற்றிய தகவலை வெளியிட்டார்.இதனையடுத்து பால்ஸ் மற்றும் அமெரிக்க பயண நிறுவன கழகம் ''விண்வெளி பயண திட்டம்"" ஒன்றை அறிவித்தது. இதன்படி போனிக்ஸ் வாகனம் மூலம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு பயணிகளை அழைத்துச் செல்லப் போவதாக கூறினார்கள்.இதற்கு ஆகும் செலவு பணத்தை பயணிகளிடம் முன்கூட்டியே வசூலிக்கவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் தேவையான பணம் சேராததால் இந்த திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.விண்வெளியில் ஓட்டல் அமைத்தல், விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், விண் வெளியில் மனிதர்கள் தங்கும் குடி இருப்புகளை அமைத்தல்.... என்று பல்வேறு திட்டங்கள் நீண்ட காலமாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஆய்வுப் பணிக்காக விண்வெளி நிலையங்களை அமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினார்கள். பின்னர் அதுவே 'விண்வெளி சுற்றுலா" தொடர்பான திட்டத்துக்கும் வழிகாட்டுவதாக அமைந்தது.

விண்வெளி ஓட்டல்



விண்வெளி சுற்றுலா ஏற்படுத்திய ஆர்வம் ரஷியாவோடு நிற்கவில்லை. இன்று விண்வெளி சுற்றுலாவை ஒரு வணிகம் சார்ந்த துறையாக மாற்றி பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பல திட்டங்கள் தயாராகி வருகின்றன. அவை பற்றிய விவரம் இதோ...
பிஜியோ ஏரோ ஸ்பேஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் ராபர்ட் பிஜியோ நிறுவியது தான் பிஜியோ ஏரோ ஸ்பேஸ். சுமார் மைல் நீளம் கொண்ட விண்வெளி விமானம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவுக்கு பறந்து சென்று விட்டு பூமிக்கு திரும்பும். இந்த திட்டத்துக்கான செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டது.

ஸ்பேஸ் ஐலேண்ட் குரூப்


இந்நிறுவனம் மோதிர வடிவ, சுற்றிக் கொண்டேயிருக்கும் விண்வெளி ஓட்டலை கட்ட இருக்கிறது. இது '2001 ஸ்பேஸ் ஓடிசி" திரைப்படத்தில் இடம்பெற்ற விண்வெளி ஓடத்தைப் போல் இருக்கும். நாசா விண்வெளி ஓடத்தின் 12 எரிபொருள் அறைகளைக் கொண்டு கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த விண் ஓடம் பூமியிலிருந்து 644 கி.மீ. தொலைவில் 2006_ம் ஆண்டு நிறுவப்பட இருக்கிறது. இந்த விண்வெளி ஹோட்டல் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவதால் 3_ல் ஒரு பங்கு அளவு கொண்ட புவிஈர்ப்பு விசையை ஏற்படுத்தும்.

ஸ்பேஸ் அட்வென்ட்சர்ஸ்:


2005_ம் ஆண்டு சிறுதூர சுழல்வட்டப் பாதையில், மறுஉபயோக செலுத்து வாகனத்தை வடிவமைத்து மக்களை ஏற்றிச் செல்லவிருக்கிறது. இந்த விண்வெளிக் கப்பலை பூமியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இயங்கும். 30 நிமிடத்திலிருந்து 150 நிமிட பயண நேரம் கொண்ட இந்த விண்வெளி சுற்றுலாவிற்காக இவ்வாகனத்தின் இருக்கைகளுக் கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

ஹில்டன் ஹோட்டல்ஸ்:


இந்த நட்சத்திர ஓட்டல் விண் வெளியில் சுற்றுலாத்துறையின் திட்டங்களுக்கு பங்குதாரராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த திட்டங்கள் நிறைவேற்ற இன்னும் 5 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளது.

விண்வெளி சுற்றுலாத்துறை முதலில் குறைவான எண்ணிக்கையில் தங்கும் இடங்களை ஏற்படுத்தும் அதேவேளையில் மிகவும் சிறப்புடையதாகவும் இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கும். இன்று நிலப் பரப்பில் அமைந்திருக்கும் ஓட்டல்களைப் போல் வெளியில் சுற்றிப் பார்க்க எதுவும் இருக்காது. ஏனென்றால் இந்த விண்வெளி நிலையம் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது. பொழுதுபோக்கிற்காக அல்ல. இருந்தாலும் முதற்கட்ட விண்வெளி ஓட்டல்கள் விண்வெளி விருந்தாளிகளுக்கு சொகுசான தங்கும் வசதி மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்கத் தயாராக இருக்கும்.

ஸ்பேஸ் ஐலேண்ட் ஓட்டல் சுற்றிக் கொண்டே இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள புவிஈர்ப்பு விசை இழுப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் விருந்தாளிகள் நிலப்பரப்பைப்போல் நடப்பதற்கும் சுற்றி வருவதற்கும் வழிவகை செய்கிறது. இந்த ஓட்டலில் ஒரு நீரோடை, நீர் மறுசுழற்சி மையம், தோட்டம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்கொண்டதாக இருக்கும்.

இதைத் தவிர விருந்தாளிகள் விண் வெளியிலும் நடக்கும் வசதிகளையும் அளிக்கிறது. இந்த ஓட்டல் நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றிவருவதால் இந்த ஓட்டல்களில் ஜன்னல்கள் இருக்காது. ஏனென்றால் இவ்வாறு சுற்றும்பொழுது விருந்தாளிகள் விண்வெளியைப் பார்த் தால் உடல் கோளாறு ஏற்படும் என்பதால் ஜன்னல்கள் தவிர்க்கப்படுகிறது. இதை ஈடுசெய்வதற்காக அறையில் திரைகள் பொருத்தப்பட்டு விண்வெளிக் காட்சிகளின் படக்காட்சிகள் திரையிடும் எண்ணத்தில் உள்ளனர்.


விண்வெளி சுற்றுலா போட்டிகள் சூடு பிடித்து விட்டதால் திருவாளர் பொது ஜனம் 'ஜம்" என்று கால்மேல் கால் போட்டுக் கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தற்போது சென்னை - மதுரை இடையே சாதாரண விமான போக்கு வரத்து இருப்பது போல இன்னும் 20 ஆண்டுகளில் பூமிக்கும் விண்வெளிக்கும் விமானப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர் லாந்து என்று செல்வது போல இனி வரும் காலத்தில் புதுமணத் தம்பதிகள் விண்வெளிக்கு தேனிலவு கொண்டாடப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சமீபத்தில் ரஷிய விண்வெளி வீரர் ïரிமெலன் சென்கோ விண்வெளியில் தங்கி இருந்தபடியே பூமியில் உள்ள தன் காதலி எக்கார்டினா டிமிட்ரேலை திருமணம் செய்து கொண்டார். இந்த 'விண்வெளி திருமணம்" புதுமையாக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் விண்வெளி பயணத்திற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு 'நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா" என்று பாட்டுப்பாடி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது. இந்த காலத்து குழந்தைகள் 'நிலா இங்கு வராது, நாம் தான் நிலா வுக்கு போக வேண்டும்", என்று அம்மா விடம் கூறுவதற்குள் விண்வெளி பய ணத்தை முழுமையாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.





'மிர்' நிலையம்

ரஷியாவின் 'மிர்" விண்வெளி நிலையம் தான் முதல் விண்வெளி சுற்றுலா தலமாக அமைய இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் மிர் விண்வெளி நிலையம் செயல்படுவது நிறுத்தப்பட்டு கடலில் விழ செய்தனர். 'மிர்" நிலையத்தின் வீழ்ச்சி என்.பி.சி. என்ற டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியது.

'நாங்க ரெடி? நீங்க ரெடியா?" என்ற பாணியில் ஒரு நிகழ்ச்சியை என்.பி.சி. நடத்தியது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு விண் வெளி வீரருக்கான பயிற்சி அளிக்கப்படும். பின்னர் விண்வெளி நிலையத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று என்.பி.சி. அறிவித்தது. ஆனால் 'மிர்" கடலில் விழுந்ததை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது..

நான் யாரிடம் கேட்பது????????

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை


அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே

காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ," என்ன நடந்தது ?

ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? " என்று கவலையோடு கேட்டாள்.

அவன்," ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில்

போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத்

தலைவலியை ஏற்படுத்திவிட்டது,." என்றான்

அவள் " நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே.

உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? "

அவன் , " நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில்

ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? " என்றான்

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?


( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல)


ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை...



முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!

சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...


முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..



மாஸ்டர் ஒருவரிடன் சென்று....



மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...

அவன் : நான் PM ஆ இருந்தேன்..



மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...????

அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.



மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....

PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....



மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...

PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.



மாஸ்டர் : நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.



PM : இது பேரு தான் ப்ளானிங்....

மாஸ்டர் : அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...



ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.



மாஸ்டர் : தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....

டெவலப்பர் : சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.



மாஸ்டர் : சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....

டெவலப்பர் : யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,



மாஸ்டர் : விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....



இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.



மாஸ்டர் : நீ என்னவா இருக்க....?

அவன் : டெஸ்டரா இருக்கேன்.



மாஸ்டர் : ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...

டெஸ்டர் : கலர் பார்க்குறேன்.



மாஸ்டர் : எதுக்கு...??

டெஸ்டர் : இத Sanity Testingனு சொல்லுவாங்க...



அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.



மாஸ்டர் : இதுக்கு என்ன பேரு....??

டெஸ்டர் : Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...



டெவலப்பர் : நான் சரியா தான் போட்டேன்.

டெஸ்டர் : நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....



மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.



சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.



டெஸ்டர் : ரொம்ப காரம்மா இருக்கு...



மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.

டெஸ்டர் : இப்ப நல்லா இருக்கு...



டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.



மாஸ்டர் : எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...

டெஸ்டர் : இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.



மாஸ்டர் : அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....



மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.



முதலாளி : என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....

மாஸ்டர் : இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.



ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.



முதலாளி : ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?

மாஸ்டர் : ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...



முதலாளி : $$@#$@##$??????

“சாரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”

“ஏங்க, உங்க தியேட்டரிலே ‘ஜெனரேட்டர்’ போடவே மாட்டீங்களா?”

“சாரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”
__________________________________________________________________________________
பசி எடுக்குதா?”

“இல்லை டாக்டர்”
“காலைலே என்ன சாப்டீங்க?”
“இருபது இட்லி”
“பசி எடுக்கல்லைன்னீங்க?”
“இப்ப எடுக்கல்லைன்னேன்”
__________________________________________________________________________________

“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”

உனக்காய் வாழ்வதெப்போ?’

‘எதிர் வீட்டுப் பெண் பார்ப்பாள்
சட்டையை அயர்ன் பண்ணிப் போடு’

‘பேனா எழுதவில்லை’
அதனாலென்ன பந்தாவாயிருக்கும்
பாக்கெட்டில் குத்து.

தெருவில் பார்ப்பவர்கள்
பிரமிக்க வேண்டாமா?
அசத்தும்படி உடையணி.

நண்பர்கள் கேலி செய்வார்கள்
முதலில் செருப்பை மாற்று.
‘காசிருக்கும்போது
ஒரு ஷூவும் கூலிங் க்ளாஸும்
வாங்கிவிடு’

அனைத்தையும் கவனித்த

என் உள்மனசு

பதில் சொல்லமுடியாக் கேள்வியொன்றை

எகத்தாளமாய்க் கேட்டது

‘எல்லாம் சரியப்பா..

நீ

உனக்காய் வாழ்வதெப்போ?’

Saturday, December 26, 2009

பொன்மொழிகள்-எட்டு

சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

Friday, December 25, 2009

இந்தியர் என்பதில் பெருமை அடைவோம்



1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா


2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இநதியா


3) உலகில் அதிகூடிய ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே (1mi க்கு மேல்)


4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா -Baily பாலம்(இமயமலை பிராந்தியம்)


5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார்


6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - South Point High School


7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை To கொல்கத்தா இடையிலானது)


9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை


10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா

Thanks for சங்கர்

தன்னை பற்றி